search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போஸ்கோ சட்டம்"

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம், ஆனந்தூர் அருகே உள்ள மேலவயல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆனந்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    கடந்த 20.10.2018 இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை திடீரென்று காணவில்லை.

    இது குறித்து சிறுமியின் தாயார் ஆர்.எஸ. மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருவாடனை டி.எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆர்.எஸ். மங்கலம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

    சிறுமி கொடுத்த வாக்கு மூலத்தின்படி இவர்களின் உறவினரான பாப்பா குடியைச் சேர்ந்த சாத்தையா மகன் ரங்கராஜன் (வயது31) என்பவரை போஸ்கோ சட்டத்தின கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #pocsoact
    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 13 வயதில் ஒரு பெண் உள்ளனர். இந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் தூத்துக்குடியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று சிறுமி விடுமுறையில் தாயை பார்ப்பதற்காக வந்துள்ளார். இதையடுத்து அவரது தாய், சிறுமியை அழைத்து கொண்டு வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடைக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பனாபுரத்தை சேர்ந்த விக்டர் ராஜா (49) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை பற்றி அவர் தாயிடம் கூறியுள்ளார்.

    இது குறித்து மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்டர்ராஜாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்டர்ராஜா ஓய்வு பெற்ற ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. #pocsoact
    ராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக போஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியைச் சேர்ந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் தனியார் நூற்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    அவர்கள் இரவு வேலைக்குச் செல்லும்போது தாத்தா வீட்டில் மாணவி தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தாத்தா வீட்டில் இருந்த மாணவி, திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவளை காணவில்லை. வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மகளை தேடினர்.

    இந்த நிலையில் பக்கத்து தெருவில் மாணவி அழுது கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பெற்றோர் அங்கு சென்று அவரை மீட்டுவந்து விசாரித்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் வெனிஸ்குமார் (வயது 25) கத்தியை காட்டி மிரட்டி மாணவியை, அந்தப் பகுதியில் ஆள் இல்லாத வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவி தெரிவித்தார்.

    அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வெனிஸ் குமார் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போஸ்கோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில கடந்த வாரம் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அந்த குடியிருப்பின் காவலாளிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டப்பிரிவின் கீழ் 17 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெசன்ட்நகர், கொடுங்கையூர், பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள பிரபலமான சி.பி.எஸ்.இ. பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்ற வாலிபர் சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். பின்னர் அங்குள்ள சிறிய சந்துக்குள் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரவீசந்திரன் தகாத முறையில் நடந்து கொண்டார்.

    இதனை அந்த பகுதி மக்கள் பார்த்துவிட்டனர். வாலிபரின் செயலை நேரில் கண்ட அவர்கள் ஒன்று திரண்டு செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட ரவீந்திரனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர்.

    பின்னர் சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார்.

    கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது 11 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் வெளிமாநிலத்தை சேர்ந்த கோவிந்தகுமார் என்ற வாலிபர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அவரையும் பொது மக்கள் மடக்கி பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். கோவிந்தகுமாரும் கைது செய்யப்பட்டார்.

    கைதான 2 வாலிபர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    கேரளா அருகே தலித் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் மீது போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மன்னந்தவாடியைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுமியும், அவரது 14 வயது தோழியும் கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள்.

    2 நாள் கடந்த நிலையில் அவர்கள் மன்னந்தவாடியை அடுத்த சுல்தான் பத்தேரியில் தனியாக தவித்தப்படி நின்றனர். அவர்களை போலீசார் மீட்டு சென்று விசாரித்தனர்.

    இதில், 2 சிறுமிகளையும் அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் ஊட்டிக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. சிறுமிகளுக்கு செல்போன் வாங்கி தருவதாக ஆசைக்காட்டி அவர்களை வாலிபர்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

    ஊட்டி சென்ற பின்பு அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து 17 வயது சிறுமியை அவர்கள் கற்பழித்தனர். 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    மறுநாள் சிறுமிகள் இருவரையும் சுல்தான் பத்தேரியில் இறக்கி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இது தொடர்பாக சிறுமிகளின் உறவினர்கள் மன்னந்தவாடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் தலித் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 வாலிபர்கள் மீது போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

    தலைமறைவான வாலிபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    வாடிப்பட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் (வயது 58) என்பவர் மிட்டாய் வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் போஸ்கோ சட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த பெருமாளை கைது செய்தனர். #tamilnews
    திருச்சியில் நடந்த சென்ற சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுமி நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஜான்பாட்ஷா (வயது 29) என்பவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    மேலும் இது பற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த சிறுமி அவரது  பெற்றோரிடம் தெரிவிக்கவே, கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்  செய்யப்பட்டது. 

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் இந்திராகாந்தி விசாரணை நடத்தி, ஜான் பாட்ஷாவை போஸ்கோ மற்றும் கொலை மிரட்டல் சட்ட பிரிவின் கீழ் கைது செய்தார்.
    கேரளாவில் தியேட்டரில் சினிமா பார்க்கும் போது இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

    சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



    மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதைவைத்து  தொழில் அதிபரான மைதீன்குட்டியை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் போஸ்கோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

    இதற்கிடையில் சிறுமிக்கு தியேட்டரில் பாலியல் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும், அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.  

    இந்நிலையில், இவ்வழக்கில் சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயாரும் தொழில் அதிபர் அருகே இருந்து உள்ளார். ஆனால் முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்தபோது அதனை அவர் தட்டிக்கேட்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தாயாரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. 
    ×